Tuesday, March 15, 2011

நண்பேண்டா !!!!!!!!!!



அது ஒரு வார கடைசி நாள். நல்லா  9 மணி வரை தூங்கிட்டு அப்போதான் எழுந்து பள்ள வேலகிட்டு இருந்தேன் அப்போதான் வந்தது அந்த போன் கால்..
போன ஆண் பண்ணி காதுல வச்சது தான் தெரியும் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாம கெட்ட வார்த்தையா வந்தது. நானு சார் யாரு சார் நீங்க எது கு திட்ரிங்க சொல்லிடு திட்டுங்கனு எவ்ளோ சொல்லி பாத்துட்டேன் அந்த ஆளு கேட்கிற மாதிரி இல்ல. கொஞ்ச நேரத்துல அவனே திட்டி டயர்ட்  ஆய்ட்டான் கடைசியா அந்த ஆளு சொன்னான் - "மவனே போன் நம்பர் வச்சி வீட கண்டுபிடிக்க முடியாத? இன்னும் ஒருமணி நேரத்துல உன்வீட்டுக்கு வரேண்ட, வந்து உன்ன அடிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போறேண்டா " அப்புடின்னு சொல்லிடு போன வச்சிட்டான்.

நானும் ஒரு கால் மணிநேரமா அவன் எதுக்கு திட்டுனான் எதுக்கு போலீஸ்கிட்ட புடிச்சி குடுக்க போறான்னு யோசிச்சி யோசிச்சி தலை வழியே வந்திடுச்சு. அப்போ முகத்துல சிரிப்போடு எங்க வீட்டுக்குள் நுழைத்தான் ஏன் நண்பன் குமார். ரொம்ப சந்தோஷமா பாட்டு பாடிகிட்டே வந்து உக்காந்தான். நானும் மெல்லாம என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்க? அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் மச்சி நான் என்னோட ஆளுகிட்ட நான் அவல காதலிக்றதா  சொல்லிட்டேன்டா!!!. இவ்வளோ நேரம் வாங்குன திட்டு எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா அவன்கிட்ட என்னடா சொன்ன அதுக்குன்னு கேட்டேன். அதுக்கு குமார் சொன்னான் போன் நம்பர் குடு காலைல போன் பண்ணி சொல்றேன்னு சொல்லிடாட அப்புடின்னு சொன்னான். நானும் போன் நம்பர் குடுத்திய அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னானு தெரியுமா சார்? மச்சி என்னோட போன் ரிபேர்  பண்ண கடைல குடுத்திருகேண்டா அதான் உன்னோட நம்பர் குடுத்துட்டு வந்தேன் மச்சி. போன் எதாவது வந்துச்சான்னு கேட்டான்..........
அப்புறம் என்ன ரெண்டுபேரும் உடனே வீட்ல இருந்து ஓடிட்டோம், ரெண்டுநாளைக்கு தலை மறைவா வாழ வேண்டியதா போச்சு....

4 comments:

அஞ்சா சிங்கம் said...

உங்க போன் நம்பர் கிடைக்குமா ?
நானும் லவ்வ சொல்லலாம்ன்னு இருக்கேன் ...........................

உளவாளி said...

அஞ்சா சிங்கம் said...
உங்க போன் நம்பர் கிடைக்குமா ?
நானும் லவ்வ சொல்லலாம்ன்னு இருக்கேன் ...........................
\\\\\\\\\\\\\\\\\\
சரியா போச்சி !!!! என்ன ஊற விட்டு தூரத்தாம அடங்க மாட்டிங்க போல இருக்கு.....

சக்தி கல்வி மையம் said...

Nice post.,

சக்தி கல்வி மையம் said...

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html

Post a Comment